காஞ்சிபுரத்தில் எரித்து கொல்லப்பட்ட இளம்பெண் கேரள மாணவி அல்ல என்பது தெரிய வந்துள்ளதால் வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
கேரளாவை சேர்ந்த ஜேசா எனும் கல்லூரி மாணவியை 50 நாட்களாக காணவில்லை. தேடுதலில் சிரமம் ஏற்பட்டதால் ஜேசா பற்றிய தகவல் கொடுப்பவர்களுக்கு 2 லட்ச ரூபாய் பரிசு கொடுப்பதாக கேரளா அரசு அறிவித்திருந்தது. இருப்பினும் வழக்கில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இந்நிலையில் காஞ்சிபுரம் செங்கல்பட்டு அருகே பழவேலி எனும் ஊரில் கடந்த மே மதம் 28ஆம் தேதி இளம்பெண் ஒருவர் எரித்து கொலை செய்யப்பட்டிருந்தார்.
இதுபற்றி வழக்கு பதிவு செய்த செங்கல்பட்டு காவல்துறை ஒருவேளை இறந்தவர் ஜேசாவாக இருக்கலாம் என சந்தேகித்து கேரளா போலீசாரை காஞ்சிபுரம் வரவழைத்தனர்.
இருப்பினும் அவரது உடலை அடையாளம் காண வந்த அவரது அண்ணன் ஜேசன் எரிந்து கிடந்த பெண்ணின் சடலத்தை பார்த்து இவர் தனது சகோதரி ஜேசா இல்லை என்று கூறினார். இருப்பினும் DNA சோதனை மேற்கொள்ள தான் உடன் படுவதாக சகோதரர் கூறியிருக்கிறார்.
இதனை அடுத்து இந்த வழக்கில் புது திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் எரித்து கொலை செய்யப்பட்ட பெண் யார் என தமிழக பொலிஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.






