வவுனியாவில் கடத்தப்பட்ட குழந்தை புதுக்குடியிருப்பில் மீட்பு!!(படங்கள் இணைப்பு)

1259

வவுனியா குட்செட் வீதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்து 8 மாத ஆண் குழந்தையான வானிஷன் எனும் குழந்தையை கடந்த (31.05.2018) அதிகாலை 2 மணியளவில் வெள்ளை வேன் ஒன்றில் வந்த நபர்கள் கடத்திச் சென்றனர்.

இச் சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையில் இன்று (02.06.2018) மதியம் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸார் குழந்தையினை கைப்பற்றியதுடன் இரண்டு பெண்களை கைது செய்துள்ளனர்

தற்போது வவுனியா பொலிஸார் மற்றும் குழந்தையின் தாயார் புதுக்குடியிருப்பு சென்று குழந்தையை மீட்டுள்ளனர்.