15 நாட்களேயான குழந்தையின் தாய் உட்பட இரு பெண்கள் கொடூரமாக கொலை!!

528

கொஸ்கம – சீதாவக பகுதியில் கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்டு இரு பெண்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று காலை இடம்பெற்றுள்ளதுடன், இதில் 34 வயதுடைய பெண் ஒருவரும் 78 வயதான அவருடைய பாட்டியுமே உயிரிழந்துள்ளனர்.

கொலை செய்யப்பட்ட 34 வயதான பெண், 15 நாட்களேயான குழந்தையின் தாய் என்பதும் தெரியவந்துள்ளது. பண கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட தகராறே இந்த கொலைக்கு காரணம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

மேலும், குறித்த பெண்களின் உறவினரே இந்த கொலையை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த கொலை தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.