வவுனியாவில் குரங்கின் தொல்லையைக்கட்டுப்படுத்த துப்பாக்கிகள் வழங்கிவைப்பு!!

620

வவுனியாவில் பல பகுதிகளில் குரங்கு மற்றும் மர அணிலின் தொல்லைகள் அதிகளவில் காணப்படுகின்றது. இதனால் வீட்டிலுள்ள கோழிகள் உட்பட ஜீவனோபாயம் அனைத்திற்கும் பெரும் சேதம் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

இதனைக்கட்டுப்படுத்த தென்னை பயிர்ச் செய்கை அலுவலகத்தினால் துப்பாக்கிகள் வழங்கி வைக்கப்படுகின்றன.

வவுனியாவில் தேங்காய், மாங்காய் போன்றவற்றிற்கு குரங்கினால் பெரும் சேதம் எற்படுத்தியும் அழிவையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது.

இதனால் குரங்கின் தொல்லையைக் கட்டுப்படுத்துவதற்கு துப்பாக்கிகள் வழங்கும் நடவடிக்கையினை வவுனியா மன்னார் பிராந்திய தென்னை பயிர்ச் செய்கை அலுவலகம் மேற்கொண்டு வருகின்றது. துப்பாக்கி பெற்றுக்கொள்பவர்களுக்கு பயிற்சிகளும் அறிவுறுத்தல்களும் வழங்கிவைக்கப்பட்டு வருகின்றன.