இதற்கு காரணம் ஈழத் தமிழர்கள் தான் : நடிகர் ராதாரவி அதிரடி!!

650

உலகம் முழுவதும் தமிழர்களை தெரிகிறது என்றால் அதற்கு ஈழ தமிழர்கள் தான் காரணம் என நடிகர் ராதாரவி கூறியுள்ளார்.

நடிகர் ராதாரவி சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், தமிழனுக்காக குரல் கொடுப்பவர்களிடம் நீ தமிழனா என கேட்கிறார்கள்.

அரசியல் தற்போது கேலிக்கூத்தாக மாறிவிட்டது. தமிழ்நாட்டில் பெரியார், ராஜகோபாலசாரியார், காமராஜர் போன்ற நல்ல அறிவாளிகள் இருந்தார்கள்.

அரசியலில் சினிமா புகழை வைத்து எம்.ஜி.ஆர் போல் ஆகிவிடலாம் என தற்போது பலர் நினைக்கிறார்கள்.

ஆனால் அது போல ஆகமுடியுமா என்பது நமக்கு தெரியாது. உலகம் முழுவதும் தமிழர்களை தெரிகிறது, இதற்கு காரணம் ஈழ தமிழர்கள் தான் என கூறியுள்ளார்.