ஆணாக மாறி காதல் திருமணம் செய்த பெண் : மனைவியிடம் சிக்கியதால் நேர்ந்த விபரீதம்!!

626

தமிழகத்தில் பெண்ணாக இருந்து ஆணாக மாறி காதல் திருமணம் செய்தவர் தீக்குளித்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சுரேஷ் நாராயணன். இவரது மகன் அஷய்தேவ் (28). பெண்ணாக பிறந்த இவருக்கு ஆண் தன்மை இருந்ததால் அறுவை சிகிச்சை மூலம் ஆணாக தன்னை மாற்றிகொண்டார்.

இந்நிலையில் அஷய்தேவ், அழகுநிலையம் நடத்தி வரும் இளவரசி என்ற பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டார்.

இருவரும் சேர்ந்து சில மாதங்கள் வாழ்ந்த நிலையில் அஷய்தேவுக்கு தாம்பத்ய உறவில் நாட்டம் இல்லாதது இளவரசிக்கு தெரியவந்தது.

இது குறித்து சந்தேகமடைந்து அஷய்தேவிடம் விசாரித்த நிலையில் அவர் பெண்ணாக இருந்து ஆணாக மாறியது இளவரசிக்கு தெரிந்தது. இதனால் கணவரிடம் சண்டை போட்டு கொண்டு இளவரசி அவரை பிரிந்து சென்றார்.

இதையடுத்து இளவரசியை சேர்ந்து வாழ அஷ்ய்தேவ் அழைத்தும் அவர் வரவில்லை. இதன் காரணமாக மனமுடைந்த அஷய்தேவ் தன் உடல் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்து கொண்டார்.

வலியால் துடித்த அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.