சென்னையில் இருந்து வந்த இலங்கையர் உடல் முழுதும் தங்கம்!

838

gold

இந்தியாவின் சென்னையில் இருந்து இலங்கை வந்த இலங்கையர் ஒருவரின் உடலில் 32 தங்கத் தகடுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த குறித்த நபர் மீது சந்தேகம் ஏற்பட்டு சுங்கப் பிரிவினர் அவரை கைது செய்தனர்.

அதன்பின் சந்தேகநபர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு எக்ஸ்ரே எடுக்கப்பட்ட போது உடம்பில் 32 தங்கத் தகடுகள் இருப்பது தெரியவந்ததாக சுங்க வருமான பிரிவு பணிப்பாளர் தெரிவித்தார்.

வத்தளை பகுதியைச் சேர்ந்த குறித்த நபர் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.