கிளிநொச்சி – அம்பாள்குளம் பகுதியில் சிறுத்தையை சித்திரவதை செய்து கொலை செய்த சம்பவத்தில் இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நேற்று முன்தினம் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன், மற்றுமொருவர் நேற்று காலை பொலிஸில் சரணடைந்துள்ளார்.
குறித்த இருவரையும் நேற்றய தினம் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் கிரேசியன் முன்னிலையில் ஆஜர்ப்படுத்திய போது இருவரையும் எதிர்வரும் 29ஆம் திகதிவரை காவலில் வைக்குமாறும் ஏனையவர்களை விரைந்து கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.
இதன் பின்னர் நேற்று மாலை மேலும் மூவர் பொலிஸில் சரணடைந்ததுடன், மற்றுமொருவரை இரவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறிப்பிட்ட நால்வரையும் இன்று கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் முற்படுத்த உள்ளதாக தெரிவிக்கும் பொலிஸார், ஏனையவர்களை கைது செய்ய தொடர்ந்தும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.