பெண் பத்திரிக்கையாளர் மீது இனவெறித் தாக்குதல்!!

544

மும்பையில் ஊபர் கேப்பில் பயணம் செய்த பெண் பத்திரிக்கையாளர் மீது, சகபெண் பயணி ஒருவர் இனவெறி தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மும்பையை சேர்ந்த பெண் பத்திரிக்கையாளர் உஷாநோட்டா பவுல், இன்று காலை தன்னுடைய சொந்த வேலையாக ஊபர் கேப்பில் பயணம் செய்துள்ளார்.

ஆனால் அவர் காரில் ஏறுவதற்கு முன்னதாக ஏற்கனவே மற்றொரு பெண் ஒருவர் அதில் பயணம் செய்துகொண்டிருந்தார்.

காரில் உஷா ஏறிய உடனே, அவரை முறைக்கும் விதமாக சகபயணி பார்த்துள்ளார்.

சிறிது நேரம் சென்றபொழுது, தான் அதிககட்டணம் கொடுத்து பயணம் செய்வதாகவும், ஆனால் இப்போது வந்தவர்களுக்கு பின்னர் தான் இறங்க வேண்டிய நிலைமை இருப்பதாகவும் ஓட்டுனரிடம் புலம்பியுள்ளார்.

இதற்கு உஷா பதிலளிக்க முயற்சிக்கும்போது, தடித்த வார்த்தைகளை பயன்படுத்தி உஷாவை, அந்த பெண் திட்டியுள்ளார்.

அவர் வேண்டுமென்றே தன்னை குறிவைக்கிறார் என்பதை உணர்ந்து கொண்ட உஷா, அமைதியாக தன்னுடைய செல்போனை பயன்படுத்திக்கொண்டிருந்துள்ளார்.

உடனே மீண்டும் உஷாவை வம்பிழுக்கும் விதமாக, அவரது கைபையை எடுத்து ஓட்டுநர் அமர்ந்திருந்த இடத்திற்கு அருகில் வைத்துள்ளார்.

இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த உஷா அவரை தன்னுடைய செல்போனில் புகைப்படம் எடுக்க முயன்றுள்ளார்.

உடனே உஷாவின் செல்போனை பறித்து கீழே வீசிய அந்த பயணி, முடியை பிடித்து தாக்குதலில் ஈடுபட ஆரம்பித்துள்ளார்.

இதனையடுத்து காரில் இறங்கிய உஷா சம்மந்தப்பட்ட பெண் குறித்து எஸ்பியிடம் புகார் அளித்துள்ளார்.

மேலும் முகத்தில் காயங்களுடன் இருக்கும் புகைப்படங்களையும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.