மட்டக்களப்பு – வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, மாங்கேணி பாம் கொலனி பகுதியில், 12 வயதுடைய சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
கடந்த 12ம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், சம்பவம் தொடர்பில் 14 மற்றும் 15 வயதுடைய சிறுவர்கள் இருவரை நேற்று கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த 12ம் திகதி ஆடு மேய்க்கச் சென்ற, 12 வயது சிறுமியை குறித்த பகுதியை சேர்ந்த இரண்டு சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளனர். எனினும், பாதிக்கப்பட்ட சிறுமி பயம் காரணமாக இதனை வெளியில் தெரிவிக்காமல் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில், தனக்கு ஏற்பட்ட விபரீத நிலை தொடர்பாக நேற்று தெரிவித்ததையடுத்து, உறவினர்கள் உடனடியாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதனையடுத்து பொலிஸார் சந்தேகத்தின் பேரில் 14 மற்றும் 15 வயதுடைய இரண்டு சிறுவர்களை கைது செய்துள்ளதுடன், பாதிக்கப்பட்ட சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.





