அம்மா எனக்கு வாழபிடிக்கவில்லை : தற்கொலை செய்துகொண்ட 14 வயது சிறுமியின் கடிதம்!!

522

மும்பை கண்டிவாலி அருகே உள்ள தாகூர் எனும் பகுதியில் ஒன்பதாம் வகுப்பு சிறுமி ஹர்ஷிகா மாயவந்தி எட்டாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இவரது தற்கொலை வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது.

உயிரை மாய்த்து கொள்வதற்காக தனது வீட்டிற்கு அருகில் உள்ள உயரமான குடியிருப்பு கட்டிடத்தில் ஏறிய ஹர்ஷிகா மாயவந்தி அங்கிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

ஹர்ஷிகா இதற்கு முன்பும் தற்கொலைக்கு முயன்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. படிப்பில் சிறந்த மாணவியான ஹர்ஷிகா எதற்காக இந்த முடிவை எடுத்தார் என்பது குறித்து பெற்றோர் குழப்பத்தில் உள்ளனர்.

இந்நிலையில் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்னர், கடிதம் ஒன்றை எழுதி அதனை சகமாணவனிடம் கொடுத்து தனது பெற்றோரிடம் இதனை கொடுத்துவிடுமாறு தெரிவித்துள்ளார்.

அந்த கடிதத்தில், அம்மா எனக்கு நீண்ட நாட்கள் வாழபிடிக்கவில்லை. நான் உடல்நலம் சரியில்லாமல் இருக்கிறேன், அதனால் தற்கொலை செய்துகொள்ளப்போகிறேன் என எழுதியுள்ளார்.

மாணவியின் தற்கொலை குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.