கல்லூரி வளாகத்தில் அடித்து கொலை செய்யப்பட்ட மாணவர் : அதிர்ச்சிக் காரணம்!!

545

கேரளாவில் கல்லூரி ஒன்றில் புதியவர்களை வரவேற்கும் வாசகம் எழுதுவதில் ஏற்பட்ட மோதலில் எஸ்எப்ஐ மாணவர் ஒருவர் கொல்லப்பட்டார்.

எர்ணாக்குளம் மகாராஜா கல்லூரி வளாக சுவரில் புதிய மாணவர்களை வரவேற்கும் வாசகங்கள் எழுதுவதில் போட்டி நிலவியதாகக் கூறப்படுகிறது.

இந்த மோதல் கலவரமாக வெடித்த நிலையில் இளங்கலை இரண்டாம் ஆண்டு படிக்கும் எஸ்எப்ஐ மாணவர் சங்கத்தைச் சேர்ந்த மாணவர் அபிமன்யூ கேம்பஸ் முன்னணி மாணவர்களால் அடித்துக் கொல்லப்பட்டார்.

இன்னொரு எஸ்எப்ஐ உறுப்பினரான அர்ஜுன் (19) மோதலில் படுகாயங்களுடன் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

கேம்பஸ் முன்னணி, தேசிய வளர்ச்சி முன்னணி சங்கங்களைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் இச்சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

மீதமுள்ள சந்தேகப்படும்படியான நபர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.