மகனுக்கு கல்லீரல் தானம் அளிக்க தந்தை செய்த செயல் : நெகிழ்ச்சி சம்பவம்!!

630

இந்தியாவில் தனது மகனுக்கு கல்லீரல் தானம் வழங்க, தனது உடல் எடையை 8 கிலோ வரை குறைத்த தந்தையின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் கம்மம் பகுதியைச் சேர்ந்தவர் உப்பாலையா(40). சிறு வயதில் போலியோ நோய் தாக்கியதால் 2 கால்களும் ஊனமுற்ற இவர், தற்போது தையல் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார்.

இவருக்கு சசிகிரண்(15) என்ற மகன் உள்ளார். இவர் ’crypto genius sirkus’ எனும் கல்லீரல் நோயினால் பாதிக்கப்பட்டார். இதனால் இவரது கல்லீரல் செயல்படவில்லை.

இந்நிலையில், மருத்துவமனையில் சசிகிரணை பரிசோதித்த மருத்துவர்கள், மாற்று சிறுநீரகத்தை தானமாக பெற்று பொருத்தினால் தான் உயிர் பிழைப்பார் என தெரிவித்துவிட்டனர்.

ஆனால், தானம் பெறுவோரின் பட்டியலில் சசிகிரண் 12வது இடத்தில் இருந்ததால், அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, தனது மகனுக்காக கல்லீரல் வழங்க உப்பாலையா முன் வந்தார். ஆனால், அவரது கல்லீரலில் 5 சதவிதத்துக்கும் அதிகமான அளவில் கொழுப்பு இருந்தது.

இதனால் அவர் 4 கிலோ எடையையாவது குறைக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்தனர். அதன் பின் உப்பாலையா 4 கிலோ எடையை குறைத்தார். எனினும், மேலும் 4 கிலோ எடையை அவர் குறைக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறினர்.

அதன் பின்னர் தனது உடலை வருத்தி, 45 நாட்களில் 8 கிலோ வரை உப்பாலையா தனது உடல் எடையை குறைத்தார். அதனைத் தொடர்ந்து, உப்பாலையாவின் உடலில் 330 கிராம் எடை கல்லீரல் எடுக்கப்பட்டு, சசிகிரணுக்கு பொருத்தப்பட்டது.

உயிருடன் இருப்பவரிடமிருந்து கல்லீரல் எடுக்கப்பட்டு, மற்றொருவருக்கு பொறுத்தப்படுவது மருத்துவ உலகில் இதுதான் முதல் முறையாகும்.

இதுதொடர்பாக உப்பாலையா கூறுகையில் ‘தினமும் 2 கிலோ மீற்றர் தூரம் நடந்தேன். அரிசி சாதம் சாப்பிடுவதை முற்றிலும் தவிர்த்தேன். ஜூஸ் வகைகளை நிறைய குடித்தேன்.

முதலில் 4 கிலோ குறைத்தேன். மேலும், உடல் எடையை குறைக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியதால், மீண்டும் 4 கிலோ என 8 கிலோ வரை எடையை குறைத்தேன்’ என தெரிவித்துள்ளார்.