வவுனியா இளைஞனுக்கு தேசிய அளவில் கிடைத்த கௌரவம்!!

626

தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் நடத்திய வருடாந்த தேசிய விருதுப் போட்டியில் அறிவிப்பாளர் நிகழ்வில் வவுனியா இளைஞன் தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் நடத்திய வருடாந்த தேசிய விருதுப் போட்டியில் வவுனியாவைச் சேர்ந்த ஜெகநாதன் சோபிதன் மாகாண மட்டத்தில் அறிவிப்பாளர் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்று தேசிய மட்டப் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளார்.

தேசிய இளைஞர்கள் சேவைகள் மன்றம் நடாத்திய வருடாந்த தேசிய விருது வழங்கும் போட்டி கடந்த புதன்கிழமை வவுனியாவில் நடைபெற்றது.

வவுனியா மாவட்டத்தில் திறமை வாய்ந்த இளைஞர், யுவதிகளை இனங்கண்டுகொள்ளும் வகையில் போட்டிகள் நடைபெற்றது. வவுனியா மாவட்டத்தில் அறிவிப்பாளர் போட்டியில் போட்டியிட்ட ஜெகநாதன் சோபிதன் மாவட்ட ரீதியாக இரண்டாம் இடத்தை பெற்று மாகாண போட்டிக்கு தகுதி பெற்றார்.

மாகாண மட்ட போட்டிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் நடைபெற்றது. மாகாண மட்டத்தில் நேர்த்தியான செய்திவாசிப்பு, மொழி உச்சரிப்பு, குரல் வளம் என்பன மிகவும் அவதானம் செலுத்தப்பட்டது. மாகாண மட்டத்திலும் ஜெகநாதன் சோபிதன் இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்டார்.

மேலும் அவர் கொழும்பு மகரகமவில் அமைந்துள்ள தேசிய இளைஞர்கள் சேவைகள் மன்றத்தில் நடைபெறவுள்ள தேசிய மட்ட போட்டியில் பங்பற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.