வவுனியா அரசாங்க அதிபராக கடமையேற்று குறுகிய காலத்திற்குள் இடமாற்றமா?

757

வவுனியாவில் புதிதாக கடமையேற்று கடமையாற்றி வரும் அரசாங்க அதிபர் சோமரத்னவிதான பத்திரனவுக்கு இடமாற்றம் வழங்கப்படவுள்ள நிலையில் புதிய அரசாங்க அதிபராக முஸ்லிம் ஒருவரை நியமிக்க அமைச்சரவைப் பத்திரம் வழங்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வடக்கு , கிழக்கின் சில மாவட்டங்களுக்கு அரசாங்க அதிபர்களாக தொடர்ந்தும் சிங்கள இனத்தைச் சேர்ந்தவர்களே அரசாங்க அதிபர்களாக நியமிக்கப்படுகின்றமை தொடர்பில் பல தரப்பினராலும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டு வருகின்றது.

வவுனியா அரசாங்க அதிபராக சோமரத்ன விதான பத்திரன நியமிக்கப்பட்டு மிகவும் குறுகிய காலத்திற்குள் மீண்டும் புதிய அரசாங்க அதிபர் நியமிக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்த நிலையில் தற்போது வவுனியாவின் அரசாங்க அதிபர் ஒரு தமிழர் நியமிக்கப்பட வேண்டியமை தொடர்பில் தமிழ் அரசியல் தலைமைகள் தமது நடவடிக்கைகளை முன்னெடுப்பார்களா என மக்கள் எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.