இரத்தம் சொட்ட சொட்ட காவல்நிலையத்திற்கு ஓடி வந்த பொலிஸ் : என் கவுண்டரில் ரவுடி சுட்டுக் கொலை!!

504

தமிழகத்தில் காவலரை வெட்டிய ரவுடியை பொலிசார் எண்கவுண்டரில் சுட்டுத்தள்ளியுள்ளனர்.

சென்னை ராயப்பேட்டை தர்கா குடிசை மாற்று வாரிய குடியிருப்பு அருகே நேற்றிரவு சிலர் குடித்துவிட்டு தகராறு செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் வந்துள்ளது.

இதனால் அப்பகுதியின் E2 ராயப்பேட்டை காவல்நிலைய முதல்நிலை காவலர் ராஜவேலு ரோந்து பணியில் சென்றுள்ளார்.

அப்போது அங்கு 5-க்கும் மேற்பட்ட ரவுடிகள் மது அருந்திக் கொண்டிருந்ததைப் பார்த்த அவர், இங்கிருந்து செல்லுமாறு கூறியுள்ளார்.

ஆனால் அங்கிருந்த சுமார் 10-க்கும் மேற்பட்டோர் காவலரை கத்தியால் சரமாரியாக தாக்கியுள்ளனர். அவரை தலையில் கத்தியால் வெட்டியுள்ளனர்.

இதனால் தலையில் பலத்த வெட்டுக் காயமுடன் ரத்தம் வடிந்த நிலையில் ராகவேலு காவல்நிலையத்திற்கு ஓடி வந்துள்ளார்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மற்ற காவலர்கள் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, அதிகாலை தாக்குதல் நடத்தியவர்கள் பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்த அதிரடி தேடலில் ரவுடி ஆனந்தன் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். இருப்பினும் ஆனந்தன் உள்ளிட்ட 4 முக்கிய குற்றவாளிகள் தப்பிச் சென்றுள்ளனர்.

தப்பிச் சென்ற அவர்களை பொலிசார் தொடர்ந்து தேடி வந்துள்ளனர்.

இந்நிலையில் அவரை பிடிக்கச் சென்றபோது, மற்ற காவலர்களை ஆனந்தன் கத்தியால் வெட்ட வந்ததாக கூறப்படுகிறது.

அப்போது தங்களை காப்பாற்றிக்கொள்ள காவலர்கள், ரவுடி ஆனந்தனை தற்காப்பிற்காக என்கவுண்டர் செய்துள்ளதாகவும், இந்த சம்பவம் மத்திய கைலாஷ் செண்ட்ரல் பாலிடெக்னிக் அருகே நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.