மத்திய கிழக்கு நாடுகளைப் போன்று யாழ்ப்பாணத்திலும் பேரீச்சம்பழ மரம் ஒன்று அதிக பழங்களை காய்ந்துள்ளது.
காரைநகர் திக்கரை முருகமூர்த்திகோவில் வீதியில் உள்ள வீடொன்றில் உள்ள பேரீச்சம் பழ மரத்திலேயே இந்த அபூர்வ நிகழ்வு ஏற்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் பல்வேறு பகுதிகளில் நீண்ட காலமாக பேரீச்சை மரம் வளர்ந்து வருகின்ற போதிலும், அவை எதுவும் காய்ந்து குலுக்கவில்லை.
எனினும் காரைநகர் பகுதியில் பேரீச்சை மரம் காய்ந்து குலுக்குவது அந்தப் பகுதி மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகள் போன்ற வெப்பவலய நாடுகளின் பெரும் பொருளாதாரப் பயிர்ச்செய்கையாக பேரீச்சம்பழம் விளங்குகிறது.
இலங்கை போன்ற பருவக்காற்று மழைக் காலநிலை நிலவுகின்ற நாடுகளில் பேரீச்சை காய்த்துப் பழுப்பது அபூர்வமான நிகழ்வு என பலரும் கருத்து வெளியிட்டுள்ளனர்.