வவுனியா வைரவப்புளியங்குளத்தில் மாணவர்களுக்கிடையே மோதல் : பொலிஸார் அசமந்தப்போக்கு?

439

வவுனியா வைரவப்புளியங்குளம் யங்ஸ்டார் விளையாட்டு மைதானத்திற்கு முன்பாக இன்று (10.07.2018) மாலை 5.30 மணியளவில் இரு மாணவ குழுக்களுக்கிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

மாலை நேர வகுப்புக்கள் நிறைவடைந்த பின்னர் யங்ஸ்டார் விளையாட்டு மைதானத்திற்கு அருகே ஒன்று கூடிய இரு மாணவ குழுக்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து முரண்பாடு மோதலாக மாறியது.

இதனையடுத்து அவசர இலக்கமான119 என்ற இலக்கத்திற்கு பொதுமக்கள் தகவல் வழங்கிய போதிலும் பொலிஸார் நீண்ட நேரத்திற்கு பின்னரே பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அதற்கு முன்னரே மாணவர்கள் அவ்விடத்திலிருந்து கலைந்து சென்றனர்.

வைரப்புளியங்குளம் வீதியில் தினசரி மாலை வேலையில் தனியார் வகுப்புகளுக்கு செல்லும் மாணவர்கள், இளைஞர்கள் வீதியின் அருகே நின்று சண்டையிடுவதும் பெண்களை கிண்டல் செய்வது , புகைத்தல் போன்ற பல்வேறு செயற்பாடுகள் இடம்பெறுகின்றன.

இவ் வீதியில் பொலிஸ் காவல் ஆரண் ஒன்றினை அமைக்குமாறு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் என்பவற்றில் பல தீர்மாணங்கள் மேற்கொள்ளப்பட்டாலும் இதுவரையில் இவ் விடயத்தினை பொலிஸார் அசமந்த போக்கவே செயற்பட்டு வருகின்றனர்.

எனவே அரசியல்வாதிகள், நகரசபை உறுப்பினர்கள் ,சழூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் இவ்விடயத்தில் தலையிட்டு தனியார் வகுப்பிற்கு செல்லும் மாணவிகள் சுதந்திரமாக செல்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் தெரிவித்தனர்.