இலத்திரனியல் கடவுச்சீட்டினால் இலங்கைக்கு ஏற்பட்ட பாரிய நட்டம்!!

425

இலங்கையில் இலத்திரனியல் கடவுச்சீட்டு வெளியிடுவதில் தொடர்ந்து சிக்கல் நிலைமை காணப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த கடவுச்சீட்டு ஒப்பந்தம், வெளிப்படைத்தன்மை இல்லாமல் மற்றும் கொள்முதல் விதிகளை மீறி பிரித்தானிய நிறுவனத்திற்கு வழங்க அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது.

இதன் காரணமாக இலங்கைக்கு வருடத்திற்கு 214 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த ஒப்பந்தம் 20 அல்லது 25 வருடங்களுக்கு வழங்கப்படவுள்ளமையினால், பொதுமக்களின் 5300 கோடி ரூபாய் பணத்திற்கு நட்டம் ஏற்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.

கடந்த 2003ஆம் ஆண்டில் இருந்து குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு வெளிநாட்டு கடவுச்சீட்டு வழங்குவதற்கு குறைந்த கட்டணம் பெற்ற நிறுவனத்திற்கு இந்த ஒப்பந்தம் வழங்காமல், பிரித்தானிய நிறுவனத்திற்கு வழங்ககப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.