மைத்திரியின் முடிவினை வரவேற்றுள்ள கிரிக்கெட் வீரர்!!

361

போதைப்பொருள் வர்த்கத்தில் ஈடுபட்டுள்ளவர்களிற்கு மரணதண்டனையை நிறைவேற்றும் முடிவு முன்னரே எடுத்திருக்கப்பட வேண்டும் என கிரிக்கெட் வீரர் திலகரட்ன தில்சான் தெரிவித்துள்ளார்.

போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற கருத்து அதிகரித்துவருவதுடன், ஜனாதிபதியும் இது தொடர்பாக ஆராய்ந்துவருகின்றார். இந்நிலையில் இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர்,

போதைப்பொருள் வர்த்கத்தில் ஈடுபட்டுள்ளவர்களிற்கு மரணதண்டனையை நிறைவேற்றும் ஜனாதிபதியின் முடிவு வரவேற்கத்தக்கது.

இந்த தீர்மானத்தை நீண்ட காலத்திற்கு முன்னர் எடுத்திருக்கவேண்டும். போதைப்பொருள் குற்றங்களிற்கு மாத்திரமல்ல சிறுவர் துஸ்பிரயோகங்கள் போன்றவற்றிற்கும் மரண தண்டனையை நிறைவேற்றவேண்டும்.

போதைப்பொருள் தொடர்பான குற்றங்களும் சிறுவர் துஸ்பிரயோகமும் அச்சப்படும் விதத்தில் அதிகரித்துள்ளன. இதன் காரணமாக மரண தண்டனையை நிறைவேற்றுவது அவசியம் என்று குறிப்பிட்டுள்ளார்.