வவுனியா இந்து அன்பக இரு யுவதிகளுக்கு அன்பகத்தின் பொறுப்பாளர் தலைமையில் திருமணம்!!

1151

 

தாய், தந்தையினை இழந்த நிலையில் வவுனியா வேப்பங்குளம் இந்து அன்பகத்தில் வசித்து வந்த இரு யுவதிகளுக்கு அன்பகத்தின் பொறுப்பாளர் சாமி அம்மா தலைமையில் நேற்று (15.07.2018) திருமணம் இடம்பெற்றது

மதுசா என்ற யுவதி 7 வருடங்களாகவும் கீர்த்தி என்ற யுவதி 5 வருடங்களாகவும் வவுனியா வேப்பங்குளம் இந்து அன்பகத்தின் வசித்து வந்துள்ளனர். இவர்கள் திருமண வயதினை அடைந்தமையினால் அன்பகத்தின் பொறுப்பாளர் சாமி அம்மாவின் ஏற்பாட்டில் திருமணம் இடம்பெற்றது.

மதுசா என்ற யுவதிக்கு தமிழ் சேவைக்கால ஆலோசகர் திரு திருமதி உதயகுமார் அவர்களும் அவரது துணைவியாரும் தாய் தந்தையாகவும் கீர்த்தி என்ற யுவதிக்கு பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்களும் அவரது துணைவியாரும் தாய் தந்தையாக பொறுப்பேற்று திருமணத்தினை நடத்தி வைத்தனர்.

இந் திருமண நிகழ்வில் இரு மணமகன் வீட்டாரின் உறவினர்களும், வவுனியா மாவட்ட சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளும் , பொதுமக்கள் , அன்பகத்தில் உள்ள சிறார்களும் கலந்து கொண்டிருந்தனர்.