பாரீஸில் முகாமிட்டுள்ள நடிகை ஐஸ்வர்யா ராய் கால்பந்து உலகக்கிண்ணத்தை பிரான்ஸ் வென்றதை கொண்டாடியுள்ளார்.
கால்பந்து உலகக்கிண்ண தொடரின் இறுதி போட்டியில் பிரான்ஸ் – குரேஷியா அணிகள் மோதிய நிலையில் பிரான்ஸ் 4-2 என்ற கோல் கணக்கில் சாம்பியன் பட்டத்தை வென்றது.
இந்நிலையில் பிரான்ஸின் வெற்றியை நடிகை ஐஸ்வர்யாராய் தனது மகள் ஆராத்யாவுடன் கொண்டாடியுள்ளார்.
ஆடம்பர பொருள் ஒன்றின் விளம்பரத்தில் நடிப்பதற்காக தற்போது ஐஸ்வர்யா ராய் பாரீஸில் மகள் ஆராத்யாவுடன் முகாமிட்டுள்ளார்.
இந்நிலையில் பிரான்ஸ் வெற்றியை அந்நாட்டு மக்கள் சாலையில் ஒன்றாக கூடி உற்சாகமாக கொண்டாடினார்கள்.அந்த வெற்றியில் தானும் கலந்து கொண்ட ஐஸ்வர்யா ராய் அது குறித்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்