குழந்தைக்கு மதுபானம் பருக்கிய தந்தை : ஆரம்பமாகியது விசாரணைகள்!!

430

ஆண் குழந்தை ஒன்றுக்கு மதுபானம் பருக்கிய காணொளி காட்சிகள் வெளியான சம்பவம் குறித்து தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை ஆரம்ப கட்ட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

தந்தை ஒருவர் தனது ஆண் குழந்தைக்கு மதுபானத்தை பருக்குவதாக நம்பப்படும் காட்சிகள் அடங்கிய காணொளியை மூன்றாம் தரப்பு ஒன்று சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியிருந்தது.

இதன் காரணமாக அந்த காணொளி பெருமளவில் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டிருந்ததுடன், பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு தெரியவந்ததை அடுத்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அதிகார சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.