யாழில் வீடு புகுந்து பெண்ணின் கழுத்தை அறுத்த மர்மநபர் : 12 தையல் போட்ட பரிதாபம்!!

985

யாழ்ப்பாணம் – தும்பளைப் பகுதியில் உள்ள வீட்டிற்குள் நுழைந்த நபர் ஒருவர், தைத்துக் கொண்டிருந்த பெண்ணின் கழுத்தை கத்தியால் வெட்டிக் காயப்படுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று பட்டப்பகலில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதில் பாதிக்கப்பட்ட 48 வயதுடைய சத்தியசோதி சிறிகௌசி என்ற பெண் பருத்தித்துறை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணின் கழுத்தில் 12 தையல்கள் போடப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

தும்­ப­ளைப் பகு­தி­யில் பிள்­ளை­யு­டன் வசித்து வரும் குறித்த பெண் வீட்டில் தனிமையில் ஆடைகளை தைத்துக்கொண்டு இருந்துள்ளார்.

இதன்போது அவ­ருக்கு பின்­பக்­க­மாக வந்த மர்ம நபர் ஒரு­வர் அவரு­டைய வாயை பொத்­தி­யுள்­ளார். இத­னால் அதிர்ச்சி அடைந்த பெண் ந­ப­ரின் பிடி­யி­லி­ருந்து தப்­பப் போரா­டி சத்தம் போட்டுள்ளார்.

இதையடுத்து பெண்­ணின் கழுத்தை கத்­தி­யால் அறுத்­து­விட்டு மர்ம நபர் அங்­கி­ருந்து தப்­பிச் சென்­றுள்­ளார் என்று பொலி­ஸில் முறைப்­பாட்­டில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

மேலும், பருத்­தித்­துறை பொலி­ஸார் விசா­ர­ணை­களை மேற்­கொண்­டுள்­ள­னர்.