சைக்கிளில் பாடசாலைக்கு சென்றபோது விபத்தில் சிக்கிய சிறுவன் மரணம்!!

614

சைக்கிளில் பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த போது விபத்துக்குள்ளாகி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் நேற்று உயிரிழந்துள்ளார்.

காத்தான்குடி நகரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வான் ஒன்றின் கதவைத் திறந்தபோது சைக்கிளில் சென்று கொண்டிருந்த சிறுவன் கதவில் மோதி வீதியில் விழுந்துள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில் வேகமாக வந்த முச்சக்கரவண்டியொன்று குறித்த மாணவன் மீது ஏறிச் சென்றுள்ளது.

இதில் படுகாயமடைந்த மாணவன் அங்கிருந்தவர்களால் காத்தான்குடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றபப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற குறித்த விபத்தில் படுகாயமடைந்து நேற்று உயிரிழந்தவர் காத்தான்குடி-1 ஐ சேர்ந்த எம்.பி.எம்.இன்ஷாப் என தெரியவந்துள்ளது.

மேலும் அவர் காத்தான்குடி மத்திய கல்லூரில் தரம் 9இல் கல்வி கற்று வந்துள்ளார்.