ஆபத்தை உணராது செயற்பட்ட இளைஞர்களுக்கு ஏற்பட்ட நிலை!!

1035

நாம் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் விபத்துக்கள் பற்றிய செய்திகளை அதிகம் கேள்விப் படுகின்றோம். விபத்துக்களில் சிறுகாயங்கள், பாரிய காயங்கள் மற்றும் மரணம் சம்பவிக்கும் விபத்துக்கள் போன்றவை நிகழ்கின்றன.

இவ்வாறன விபத்துக்களில் பெரும்பாலானவை கவனக்குறைவினால் ஏற்படுகின்றதாக சுட்டிக்காட்டப்படுகிறது. இது பெரும்பாலும் உண்மையே.

சிலர் வாகனங்களைச் செலுத்தும் போது நித்திரை கொள்ளுதல், மதுபோதையில் வாகனத்தைச் செலுத்துதல் போன்ற சில காரணங்களைக் குறிப்பிடலாம்.

அந்தவகையில், சில இளைஞர்கள் மோட்டார் சைக்கிளை கையில் எடுத்தவுடன் தங்களை மறந்து விடுகின்றனர். அதுமட்டுமின்றி ஓட்டிச் செல்லும்போது என்ன செய்கிறோம் என்ற உணர்வின்றி செயற்படுகின்றனர்.

இதனால் தங்களின் அமைதியான வாழ்க்கையினை இழக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றர்.

இவ்வாறான நிலையே இந்த காணொளியில் இருக்கும் இரு இளைஞர்களுக்கும் ஏற்பட்டுள்ளது. இலங்கையில் எந்தப்பிரதேசத்தில் இந்த விபத்து ஏற்பட்டது என்பது தெரியவரவில்லை. எனினும் இது ஏனையவர்களுக்கு ஒரு விழிப்புணர்வாக உள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் போது வண்டியின் சக்கரத்தினை உயர்த்திக்கொண்டு இருவரும் எழும்பி நின்று செல்லும் போது மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளனர்.