இரத்தினபுரி, சுமனா மகளிர் வித்தியாலயத்தில் உயர் தர பரீட்சைக்காக சென்ற மாணவி ஒருவர் விபத்துக்குள்ளாகியுள்ளார்.
தனது தந்தையுடன் உயர்தர பரீட்சைக்காக சென்ற சந்தர்ப்பத்தில் அவர்களின் மோட்டார் வாகனத்தில் பேருந்து ஒன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்துக்குள்ளான மாணவி காயமடைந்துள்ளதாகவும், அவரது தந்தை குறித்த பாடசாலையின் ஆசிரியர் என தெரிவிக்கப்படுகின்றது.
மோட்டார் வாகனத்தின் பின் ஆசனத்தில் மாணவி அமர்ந்திருந்த நிலையில், தந்தை அருகில் உள்ள கடைக்கு சென்றுள்ளார்.
இதன் போது அந்தப் பகுதியால் வந்த பேருந்து மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. எனினும் விபத்தில் காயமடைந்த மாணவி, காயத்துடன் பரீட்சைக்கு முகம் கொடுத்துள்ளார்





