வீட்டில் தந்தையின் சடலம் : பரீட்சை எழுத சென்ற மாணவி : வாழ்க்கையை மாற்றும் மனிதநேயம்!!

496

இலங்கையில் அதிகம் பேசப்படும் நபராக ஐந்தாமாண்டு புலமைப்பரிசில் பரீட்சை எழுதிய மாணவி மாறியுள்ளார்.

காட்டு யானையின் தாக்குதலில் உயிரிழந்த தந்தையின் சடலத்தை வணங்கி ஆசி பெற்று, பரீட்சை எழுத சென்ற மாணவியே பலரின் மனங்களை வென்றுள்ளார்.

மாணவி தொடர்பான தகவல் வெளியானதும் அவரது கல்வி நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காக பலர் முன்வந்துள்ளனர்.

மாணவியின் கல்வி நடவடிக்கைகளுக்காக பன்னல்கம வித்தியாலயத்தின் அதிபரின் தலையீட்டில் இந்த உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. அதற்காக 077 8 826 598 என்ற தொலைபேசி இலக்கம் ஊடாக அதிபரை தொடர்பு கொண்டு குறித்த மாணவிக்கு உதவ முடியும் என குறிப்பிடப்படுகின்றது.

எதிர்பார்க்காத நேரத்தில் தங்கள் குடும்பத்திற்கு ஏற்பட்ட நிலைமை தொடர்பில் உயிரிழந்த நபரின் மனைவி கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

“மாலை எனது கணவருடன் குளிக்கச் சென்றுள்ளார். பின்னர் வீட்டிற்கு வந்து என்னிடம் 200 ரூபாய் பெற்றுக் கொண்டு வெளியே சென்றுள்ளார். 7.30 மணியளவில் வைத்தியசாலை செல்ல தயாராகுங்கள் என அண்ணி கூறினார்.

எனது கணவர் சைக்கிளில் இருந்து விழுந்து விட்டார். அவரின் தலையில் இருந்து அதிகமாக இரத்தம் வெளியேறியது. அவருக்கு யானை தாக்கியதாக பின்னரே தெரியும்.

எனது கணவர் கூலி வேலை செய்து தான் எங்களுக்கு உணவு வழங்கி வந்தார். தற்போது எங்களுக்கு வயலேதும் இல்லை. எங்களுக்கு உதவ யாரும் இல்லாமல் எங்கள் குடும்பம் பாதிக்கப்பட்டுள்ளது.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இக்கட்டான சூழ்நிலையிலும் பரீட்சை எழுதச் சென்ற மாணவிக்கு சமூக வலைத்தளங்களில் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

கடந்த வருடமும் இதேபோன்றதொரு சம்பவம் இடம்பெற்றமையும் இதன்போது நினைவு கூரப்பட்டு வருகிறது.