குழந்தைகளுடன் இலங்கை இளம் தமிழ் பெண் இந்தியாவில் மாயம் : பொலிஸார் தீவிர விசாரணை!!

596

இலங்கை தமிழ் அகதிகள் முகாமை சேர்ந்த பெண் ஒருவர் தனது இரண்டு குழந்தைகளுடன் காணாமல் போயுள்ளதாக தமிழக ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் காணாமல் போனவர்களை தேடும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்த்தாண்டம் அருகேயுள்ள இலங்கை தமிழ் அகதிகள் முகாமை சேர்ந்த இராஜேஸ்வரி, தனது 12 மற்றும் 6 வயதான இரண்டு பெண் குழந்தைகளுடன் கடந்த வியாழக்கிழமை காணாமல் போயுள்ளார்.

காணாமல் போனவர்கள் குறித்த எந்த தகவல்களும் இதுவரையில் வெளியாகவில்லை. இது குறித்து மார்த்தாண்டம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், காணாமல் போனவர்களை தேடும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.