கொழும்பின் புறநகர் பகுதியில் துப்பாக்கிச் சூடு : ஆபத்தான நிலையில் பெண்!!

490

கொழும்பை அண்மித்த கடவத்த, கோனஹேன, ஆம்ஸ்ரோங் சந்தியில் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று பிற்பகல் ஒரு மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படகின்றது.

இந்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் பெண் ஒருவர் காயமடைந்த நிலையில் ராகமை வைத்தியசாலையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலதிக விசாரணைகளை கடவத்தை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.