பேருந்து பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு : விரைவில் வரவுள்ள நெருக்கடி!!

545

தனியார் பேருந்து உரிமையாளர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டமொன்றை முன்னெடுக்க உள்ளதாக அறிவித்துள்ளனர்.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் 12ஆம் திகதி நள்ளிரவு முதல் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.

தண்டப் பணம், எரிபொருள் விலையேற்றம், சீருடைப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து மாகாண தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் சரத் விஜித குமார இந்த போராட்டம் குறித்து கொழும்பு ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

இதேவேளை தனியார் பேருந்து உரிமையாளர்கள் மேற்கொள்ளும் இந்த பணிப்புறக்கணிப்பிற்கு ஆதரவளிக்கும் வகையில், பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்களும் பணிப்புறக்கணிப்பு ஒன்றில் ஈடுபட உள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

விரைவில் நடத்தப்படவுள்ள இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக பொது மக்கள் பாரிய நெருக்கடிக்கு முகங்கொடுப்பார்கள் என சமூக ஆர்வலர்கள் குறிப்பிட்டுள்ளனர்.