மேற்பார்வையாளரிடம் வசமாக சிக்கிக் கொண்ட மாணவனின் மோசமான செயல்!!

517

கம்பஹாவிலுள்ள பரீட்சை நிலையமொன்றில் உயர் தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவரொருவர் வசமாக சிக்கிக் கொண்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

குறித்த மாணவன் நேற்றைய தினம் கைப்பேசியை உபயோகித்து பரீட்சையை எழுதிய போதே மேற்பார்வையாளரிடம் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து பரீட்சை மேற்பார்வையாளரால் மாணவனிடமிருந்து கைப்பேசி பறிக்கப்பட்ட போதும், அன்றைய தினத்திற்கான பரீட்சையை மாணவன் நிறைவு செய்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்படும் என பரீட்சை ஆணையாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.