யாழ். குடாநாட்டில் பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை : 50 பேர் கைது!!

1177

யாழ்ப்பாணம் பிரதேசத்தில் 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழில் இடம்பெற்ற குழு மோதல்கள் தொடர்பில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த மாதத்தின் முதலாம் திகதியில் இருந்து மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம், மானிப்பாய், கோப்பாய், சுன்னாகம் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை போது, யாழில் வன்முறை செயற்பாடுகளுக்கு தொடர்புடைய 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அந்த பிரதேசத்தில் இயங்கும் குழுக்களுக்கு இடையில் மோதல் மற்றும் பொது மக்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை, கொள்ளையில் ஈடுபட்டமை ஆகிய செயற்பாடு தொடர்பில் இந்த கைது சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் பிரதேசத்தில் ஆவா, தனுரொக்,, விக்டர் போன்ற குழுக்களினால் யாழ்ப்பாணத்தில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

யாழ்ப்பாணம், மானிப்பாய், கோப்பாய் சுன்னாகமம் பிரதேசத்தில் பொலிஸாரின் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதுடன், விசேட சுற்றி வளைப்பு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.