வவுனியா சுற்றுவட்ட வீதியில் இன்று (17.08.2018) அதிகாலை மரமொன்று சரிந்து வீழ்ந்ததில் பல மணிநேரமாக இவ் வீதியூடான போக்குவரத்து தடை ஏற்ப்பட்டுள்ளது.
சுற்றுவட்ட வீதியில் நின்ற பழமைவாய்ந்த மரமொன்று அதிகாலை வீதியில் சரிந்து வீழ்ந்துள்ளது. இதன் காரணமாக சுற்றுவட்ட வீதியூடான போக்குவரத்து பல மணிநேரமாக தடை ஏற்பட்டுள்ளது.
குறித்த இடத்திற்கு விரைந்த இலங்கை மின்சாரசபையினர் மின்சாரத்தினை தூண்டிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர்.









