யாழ்ப்பாணத்தில் நபர் ஒருவர் கொடூரமான முறையில் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். காரைநகர் பிரதேசத்தை சேர்ந்த 56 வயதான நடராஜா தேவராஜா என்பவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்றிரவு குழுவொன்றினால் பலவகையான தாக்குதல்களை மேற்கொண்டு அவரைக் கொலை செய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மூன்று பேர் அடங்கிய குழுவொன்று லொரி ஒன்றில் வந்து தாக்குதலை மேற்கொண்டுள்ளது. குறித்த மூவரையும் கைது செய்வதற்காக விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த கொலைச் சம்பவத்துடன் யாழில் செயற்படும் ஆவா குழுவுக்கு தொடர்பு இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.