வீட்டில் திடீர் குழந்தை பிரசவம் : அவசர சேவையால் உயிர் தப்பிய தாய் மற்றும் சேய்!!

367

களுத்துறை, வெலிபென்ன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீடொன்றில் யாரும் இல்லாத சந்தர்ப்பத்தில் பெண் ஒருவர் குழந்தை பிரசவித்துள்ளார்.

யாரும் உதவிக்கு இல்லாத நிலையில் குழந்தை பிரசவித்த பெண் வாழ்விற்கும் மரணத்திற்கும் இடையில் போராடியுள்ளார்.

எனினும் அயலவர் ஒருவர் 1990 என்ற அவசர அம்பியுலன்ஸ் சேவையின் உதவியை நாடியமையினால், தாயும் குழந்தையும் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

கடந்த 14ஆம் திகதி இரவு 9.48 மணியளவில் தாய் ஒருவர் குழந்தை பிரசவித்துள்ளதாக, அயலவர் ஒருவர் 1990 என்ற அம்பியுலன்ஸ் சேவைக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

அழைப்பு கிடைத்த சில நொடிகளுக்குள் அவசர சேவைக்கான வைத்தியர்கள் இருவர் அங்கு சென்றள்ளனர்.

அந்த காலப்பகுதியில் தாய் குழந்தையை பிரசவித்து வீட்டிலுள்ள சுவரில் சாய்ந்த நிலையில் காணப்பட்டுள்ளார். அவருக்கு அவசர சிகிச்சை வழங்கப்பட்டு நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

31 வயதான இந்த தாய், தனது குழந்தையுடன் ஆரோக்கியமான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.