ஜனநாயக மக்கள் விடுதலைமுண்ணனி (DPLF) இன் 30 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கற்றல் உபகரணங்கள் அன்பளிப்பு!!

673

அமரர் மேரிகிறேஸ் சிங்காரம் அவர்களின் நினைவாக ஜேர்மனியில் வசிக்கும் அவரது மகனின் நிதிப்பங்களிப்பில் நிலியாமோட்டை சரஸ்வதி வித்தியாலத்தில் கல்விகற்கும் மாணவர்களுக்கு நேற்று (12.09.2018) கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது.

இன் நிகழ்வு வித்தியாலத்தின் அதிபர் திருமதி கணகரட்னம் தலமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் வட மாகான சபை உறுப்பினர் ஜீ.ரீ.லிங்கநாதன், முன்னாள் உபநகரபிதாவும் வவுனியா நகரசபை உறுப்பினருமான சந்திரகுலசிங்கம் (மோகன்), தெற்கு தமிழ் பிரதேசசபை உறுப்பினர் யோகராஜா, தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினர்களான குகதாசன் (குகன்), உத்தரியநாதன், செட்டிகுளம் பிரதேசசபை உறுப்பினர்களான ஜெகதீஸ்வரன் (சிவம்) , சுஜீவன், பரிகரன் மற்றும் நிஷாந்தன், கிராம அபிவிருத்தி சங்க தலைவர் செல்வகுமார், வித்தியாலய ஆசிரியர்கள்.மாணவர்கள் பெற்றோர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.