பேருந்துக்குள் இருந்து பெண் ஒருவரின் கருகிய உடல் மீட்பு!!

505

கம்பஹா – உடுகம்பொல, கெஹெல்பத்தார பகுதியில் பேருந்து ஒன்றில் இருந்து உடல் கருகிய நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

119 என்ற பொலிஸ் அவசர அழைப்பு பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த சடலத்தை இன்று காலை பொலிஸார் மீட்டுள்ளனர்.

சாரதியின் இருக்கைக்கு அருகில் குறித்த பெண்ணின் சடலம் கருகிய நிலையில் காணப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் உடுகம்பொல பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதுடைய, குறித்த பேருந்தின் உரிமையாளரின் மனைவி என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பஹா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.