நயினை நாகபூஷணி அம்மன் ஆலயத்தில் நடந்த அதிசயம்!!

810

நயினை நாகபூஷணி அம்மன் ஆலயத்தில் ஏற்பட்ட அதிசயத்தை காண பெருமளவு பக்தர்கள் படையெடுத்து வருகின்றனர்.

ஆலயத்திலுள்ள நாகப் பாம்பு ஒன்று அம்மனுக்கு பூக்களை கொண்டு பூஜை செய்யும் அதிசய சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அம்மன் ஆலயத்திற்கு அருகிலுள்ள செடிகளிலுள்ள பூக்களை பாம்பு கொண்டு வந்துள்ளது.

இந்த அதிசய சம்பவத்தை கேட்டு பெருமளவு பக்தர்கள் ஆலயத்தில் ஒன்று கூடியுள்ளனர். அண்மைக்காலமாக தாயகத்திலுள்ள ஆலயங்களில் பல்வேறு விதமான அதிசய சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.

குறிப்பாக வரலாற்று சிறப்புமிக்க நயினை நாகபூஷணி அம்மன் ஆலயத்தில் பல்வேறு அதிசயங்கள் ஏற்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தற்போது பாம்பின் தெய்வீக செயற்பாடு அங்குள்ள பக்தர்களை பெரிதும் பரவசத்தில் ஆழ்த்தியுள்ளது.