வவுனியாவில் மண் பரிசோதனை ஆய்வுகூடம் திறந்து வைப்பு!!

930

விவசாயிகளின் நலன்களை கருத்திற்கொண்டு மண் பரிசோதனை ஆய்வு கூட நிலையமொன்று நேற்று வவுனியாவில் திறந்து வைக்கப்பட்டது.

வவுனியா பூங்கா வீதியில் அமைக்கப்பட்ட மண் பரிசோதனை ஆய்வு கூடத்தினை வடக்கு மாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.

விவசாயிகள் தமது விவசாய நிலங்களில் தேவையற்ற பசளை வகைகளை பயன்படுத்தாது மண்ணின் தன்மையை மாற்றியமைக்காது இருப்பதற்கும், விவசாய நிலத்திற்கு தேவையான பசளையை கண்டறிந்து அதனை பயிருக்கு இட்டு அதிகளவான விளைச்சளை ஏற்படுத்துவதற்கு வசதியாகவும் மண் பரிசோதனை ஆய்வு கூடம் திறந்து வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் வட மாகாணசபை உறுப்பினர்களான எம்.தியாகராசா, ஆர். இந்திரராசா, நீர்ப்பாசன திணைக்கள பொறியிலாளர் உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.