வவுனியாவில் தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு நூலகக் கண்காட்சி!!

650

தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு வவுனியா கோவில்குளம் இந்துக்கல்லூரியில் நூலகக் கண்காட்சி இன்று (27.09) பாடசாலை அதிபர் த.பூலோகசிங்கம் தலமையில் இடம்பெற்றது.

கல்வி அமைச்சினால் வழங்கப்பட்ட மாணவர்களுக்கு பயன்படக்சுடிய ஒரு தொகுதி புத்தகங்கள் வாசிப்பு தினத்தை முன்னிட்டு கண்காட்சிக்காக வைக்கப்பட்டது.

நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு கோவில்குளம் கிராம உத்தியோகத்தர் பி.பத்மரஞ்சன் நூலகக்கண்காட்சியை திறந்து வைத்தார்.

பாடசாலை மாணவிகளால் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டு நூலக கண்காட்சி நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது. அதிதிகள் நூலகக் கண்காட்சியை பார்வையிட்டதை தொடர்ந்து பாடசாலை மாணவர்கள் நூலகக் கண்காட்சியை பார்வையிட்டிருந்தனர்.

இக்கண்காட்சியில் பொது அறிவு, கல்வியல், கலை, புவியியல், தகவல் தொழில் நுட்பம் மற்றும் மாணவர்களுக்கான பயன்தரும் நூல்கள் வைக்கப்பட்டிருந்தது.

இந்நிகழ்வை பாடசாலை நூலகப் பொறுப்பாசிரியர் திருமதி மேசி அருள்னேசன் ஒழுங்குபடுத்தியிருந்தார்.

நிகழ்வில் விருந்தினர்களாக அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி ஆர்.சந்திரிக்கா, பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள்,மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டு நூல்களை பார்வையிட்டிருந்தனர்.