வவுனியாவில் பேரூந்தில் கஞ்சாவுடன் ஒருவர் கைது!!

1507

யாழ்ப்பாணத்திலிருந்து கதிர்காமம் நோக்கி கேரள கஞ்சாவினை கடத்தி சென்றவரை வவுனியா பொலிஸார் நேற்று (29.09) இரவு 9.30மணியளவில் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் யாழ் – கதிர்காமம் பேருந்தை நொச்சிமோட்டை பகுதியில் வழிமறித்து சோதனை மேற்கொண்ட போது அப் பேருந்தில் பயணித்த மொனராகலையை சேர்ந்த விஜித பண்டார என்ற 34 வயதுடைய நபர் 2 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் நாளை வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.