வவுனியாவிலிருந்து கொழும்பிற்கு மோட்டார் சைக்கிலில் கேரள கஞ்சாவினை கடத்த முற்பட்ட 26 வயதுடைய பெண் ஒருவரை நேற்று (30.09.2018) இரவு 9 மணியளவில் வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வவுனியா ஓயார்சின்னக்குளத்தினைச் சேர்ந்த 26 வயதுடைய பெண் கொழும்பிலுள்ள ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகின்றார். அங்கிருந்து வவுனியாவிற்கு மோட்டார் சைக்கிலில் வருகை தந்து கேரள கஞ்சாவுடன் மீண்டும் கொழும்பினை நோக்கி மோட்டார் சைக்கிலில் புறப்படவிருந்த சமயத்தில் குருமன்காடு பகுதியில் வைத்து வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த பெண்ணிடமிருந்து 1கிலோ 620கிராம் கேரள கஞ்சாவினை கைப்பற்றியுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் முன்னினையில் ஆஜர்படுத்தவுள்ளதாக வவுனியா பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.





