வழக்குகள் தொடரப்படாமல் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகள் துரிதமாக விடுதலை செய்யப்பட வேண்டும் : கே.கே. மஸ்தான்!!

967

வழக்குகள் தொடரப்படாமல் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் துரிதமாக விடுதலை செய்யப்பட வேண்டும் என மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் கே.கே.மஸ்தான் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக நடைபெற்ற சத்தியாக்கிரகப் போராட்டத்தில் இன்று (01.10) கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் பேதே மீள் குடியேற்ற பிரதி அமைச்சர் கே.கே. மஸ்தான் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர், அரசியல் கைதிகளின் விவகாரம் தொடர்பான போராட்டங்களில் ஏன் கலந்துகொண்டிருந்தேன் என்பது தொடர்பாக ஜனாதிபதியுடன் மற்றும் பிரதமருடனும் பேசியிருந்தேன்.

வழக்குகள் தொடரப்படாமல் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகள் துரிதமாக விடுதலை செய்யப்பட வேண்டும் அதற்கு நான் அரச உயர்மட்டங்களுக்கு அழுத்தங்களை கொடுப்பேன் என தெரிவித்தார்.

சத்தியாக்கிரகப் போராட்டத்தில் கலந்துகொண்டிருந்த ஈரோஸ் அமைப்பின் இணைச் செயலாளர் ஜீவன் ராஜேந்திரன் கருத்து தெரிவிக்கையில்,

நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்க தமிழ் பேசும் மக்கள் மிகப்பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளனர். மனிதாபிமான அடிப்படையில் அரசாங்கம் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டும் என தெரிவித்தார்.