வவுனியாவில் இன்று(04.10) பொலிசாரின் நடவடிக்கையின் போது வாகனம் ஒன்றில் கேரள கஞ்சாவினை எடுத்துச் சென்ற 3 இளைஞர்களைக் கைது செய்துள்ளதாகவும் அவர்களிடமிருந்து 12இலட்சம் ரூபா பெறுமதியான கஞ்சாவினை கைப்பற்றியுள்ளதாகவும் வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கீழ் செயற்படும் போதை ஒழிப்புப்பிரிவினர் தெரிவித்துள்ளனர். இவ்விடயம் குறித்து மேலும் தெரியவருகையில்,
வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுர அபேவிக்கிரம தலைமையில் கீழ் செயற்படும் போதை ஒழிப்புப்பிரிவினர் இன்று அதிகாலை ஓமந்தை சந்தியில் பகுதியில் கிளிநொச்சியிலிருந்து கிண்ணியா, திருகோணமலைக்குச் சென்ற டொல்பின் ரக வாகனம் ஒன்றினை மறித்து சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டபோது அவ்வாகனத்தில் மறைத்து எடுத்துச் செல்லப்பட்ட 7கிலோ 924கிராம் கேரளா கஞ்சாவினை கைப்பற்றியுள்ளனர்.
அதை எடுத்துச் சென்ற வாகனச்சாரதி உட்பட கிண்ணியாவைச் சேர்ந்த 19, 26, 32 வயதுடைய மூவரைக் கைது செய்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகளின் பின்னர் நாளைய தினம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இந்நடவடிக்கையின்போது உதவிப் பொலிஸ் உத்தியோகத்தர் ஜ. எம்.நசீம், பொலிஸ் பரிசோதகர்களான காமினி (24907), சிந்து (67099), அசேல (77582), நிரோஷன் (88567), பந்துல (34251) ஆகிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் போதை ஒழிப்புப்பிரிவினர் மேலும் தெரிவித்துள்ளனர்.