வவுனியாவில் குடும்பஸ்தர் தூக்கில் தொங்கி சடலமாக மீட்பு!!

912

வவுனியா ஈச்சங்குளம் பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய கனகசிங்கம் கதிர்காமநாதன் எனும் குடும்பஸ்தரே மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று(06.10.2018) காலை மீட்கப்பட்டுள்ளார்

நேற்றைய தினம் குடும்பத்தில் ஏற்பட்ட தகாறாறே தற்கொலை செய்வதற்கு காரணம் என அங்கிருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன

சம்பவ இடத்திற்க்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். பிரேத பரிசோதனைக்குப் பின்பே எதனையும் தீர்க்கமாக கூறலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.