வவுனியா இறம்பைக்குளம் மகாவித்தியாலயத்தில் 76 மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி!!

1426

புலமைப்பரீட்சை பெறுபேறுகள் நேற்று (05.10.2017) வெளியாகியிருந்த நிலையில் வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலயத்தில் மாணவர்களான ச.லதுஷனா 193 புள்ளிகளை பெற்று மாவட்ட ரீதியில் இரண்டாம் நிலையிலும் கொ.ஏஞ்ஷலின் அபி கெயில் 192 புள்ளிகளை பெற்று மாவட்ட ரீதியில் நான்காம் இடத்தினையும்,

ம.ஜதுசன், ந.நயனி ஆகிய இரு மாணவர்களும் 191 புள்ளிகளை பெற்று 5ம் இடத்தினையும், ச.சாயனி 189 புள்ளிகளை பெற்று மாவட்ட ரீதியில் 09வது இடத்தினையும், ஆர்.ருபேஸ் 188 புள்ளிகளை பெற்று மாவட்ட ரீதியில் 11வது இடத்தினையும் பா.சந்தோஸ், யூ.நில்பி பீரிஸ், ஜே.சாஹித்தியா ஆகிய மூன்று மாணவர்களும் 187 புள்ளிகளை பெற்று 14வது இடத்தினையும் ஹரிசாயினி , டே.யாசினி, எஸ்.டிபாணி ஆகிய மூன்று மாணவர்களும் 186 புள்ளிகளை பெற்று மாவட்ட ரீதியில் 20வது இடத்தினையும் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளதாக பாடசாலையின் அதிபர் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

164 புள்ளிகளுக்கு மேல் பெற்று 76 மாணவர்கள் சித்தியடைந்துள்ளதுடன் 100 – 163 புள்ளிகளை 100 மாணவர்களும் , 70 – 99 புள்ளிகளை 05 மாணவர்களும் , 40- 69 புள்ளிகளை 01 மாணவனும் பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.