வானின் அதிசயங்களுடன் இணைந்த ஆசியாவின் அதிசயம்!!

635

ஆசியாவின் அதிசயம் என அழைக்கப்படுகின்ற இலங்கையில் உள்ள தாமரைக்கோபுரத்தினை அமைக்கும் பணிகள் நிறைவை எட்டியுள்ளன.

இந்நிலையில், தாமரைக்கோபுரத்தின் புகைப்படங்கள், அதன் காட்சியமைப்பு, அதன் நிர்மாணப்பணிகள் தொடர்பான புகைப்படங்கள் என்பது தொடர்ந்தும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

இந்நிலையில், கொழும்பில் இன்று பிற்பகல் வேளையில் நிலவிய மந்தமான காலநிலையில், சிறிது மழைத்தூரலுடனான காலநிலையில் ஏற்பட்ட இரட்டை வானவில்லுடன் சேர்ந்த தாமரைக்கோபுரத்தின் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.

தாமரைக்கோபுரத்தைச் சுற்றி இரண்டு வானவில்கள் இருந்த காட்சி பலரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளதுடன் மிக அழகாக அனைவரையும் கவரும் வகையில் அமைந்துள்ளது.

அத்துடன் பகல், இரவு மற்றும் மாலை வேலைகளில் புகைப்பட கலைஞர்கள் உள்ளிட்ட பலரால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தொடர்ச்சியாக இலங்கை மக்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.