வவுனியா மாணவர்கள் தேசியரீதியில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் 10 பதக்கங்கள் பெற்று சாதனை!!

775

கொழும்பு பாதுக்க பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ பியரத்ன மத்திய கல்லூரியில் 27.10.2018 தொடக்கம் 31.10.2018 வரை தேசிய ரீதியில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் வவுனியாவைச் சேர்ந்த வீரர் வீராங்கனைகள் 10 பதக்கங்களை தனதாக்கிக் கொண்டுள்ளனர்.

அகில இலங்கை பாடசாலை குத்துச்சண்டை சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் வவுனியா பூந்தோட்டம் திருஞானசம்பந்தர் பாடசாலை 9 பதக்கங்களையும், விபுலானந்தா கல்லூரி ஒரு பதக்கத்தையும் கைப்பற்றி வவுனியாவிற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

மூன்று தங்கப்பதக்கங்கள், இரண்டு வெள்ளிப் பதக்கங்கள், ஐந்து வெண்கலப்பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்
.
வவுனியா குத்துச்சண்டை பயிற்றுவிப்பாளர்களான எம்.எம்.சுரங்க மற்றும் எம்.நிக்சன் ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் 12 பேர் பங்குபற்றிய இந்நிகழ்வில் 10 பேர் பதக்கங்களை சுவீகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பதக்கங்களை பெற்றுக்கொண்ட மாணவர் விபரம்

பூந்தோட்டம் திருஞானசம்பந்தர் பாடசாலை
S. ஜானுப்ரியா – தங்கப் பதக்கம் – 30-32Kg
U. கீர்த்தனா – தங்கப் பதக்கம் – 44-46 Kg
N. லக்ஸிகா – தங்கப் பதக்கம் – 63-70 Kg
K. சிலோஜனா – வெள்ளிப் பதக்கம்- 42-44Kg
T. சதுர்ஷினி – வெள்ளிப் பதக்கம் – 48-50 Kg
K. கமலினி – வெண்கலப் பதக்கம் – 38-40Kg
K. தேனுஜா – வெண்கலப் பதக்கம் – 46-48Kg
L. கஜேந்தினி – வெண்கலப் பதக்கம் – 40-42Kg
V. கிஷாலினி – வெண்கலப் பதக்கம் – 54-56Kg
தேசிய ரீதியில் சிறந்த பெண் போட்டியாளர் K.சிலோஜனா

வவுனியா விபுலானந்தா கல்லூரி
M.ஷானுஜன் – வெண்கலப் பதக்கம் – 46-48Kg