கனாடவில் சாதனை படைத்த இலங்கைத் தமிழர்கள்!!

493

கனடாவில் நடைபெற்ற அமெரிக்கன் காற்பந்தாட்ட கழக மட்டப் போட்டித் தொடரில் இலங்கைத் தமிழர்கள் சாதனை படைத்துள்ளனர்.

கல்கரி சிட்டி ஷீப்ஸ் கழகம், டிவிசன் 3 சாம்பியன் பட்டத்தை வென்றெடுத்துள்ளது. இந்த கழகத்தின் பயிற்றுவிப்பாளராக இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட அமோஸ் டன்ஸ்டன் கடமையாற்றி வருகின்றார்.

அமோஸின் சகோதரர் ஆரோன் டன்ஸ்டன் இந்த அணியில் முக்கிய வீரராக இடம்பெற்றுள்ளார். இந்தப் போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் கல்கரி ஷீப்ஸ் கழகம் அபார வெற்றியை பதிவு செய்தது.

இந்த போட்டியில் கோல்ட்ஸ் அணியை 40 க்கு 16 என்ற புள்ளிகள் அடிப்படையில் ஷீப்ஸ் கழகம் வீழ்த்தி வெற்றி பெற்றது.

கல்கரி ஷீப்ஸ் கழகம் முதல் தடவையாக லீக் சுற்றில் பங்கேற்றிருந்துடன் சம்பியன் பட்டத்தையும் வென்றெடுத்துள்ளது.

ஷீப்ஸ் அணியில் இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட வர்னக்க இளந்தார்கே என்ற வீரரும் விளையாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.